கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோரும் சதுரங்கம் விளையாடினர்.



கோவை: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி போட்டியானது துவங்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேனர்கள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் செஸ் விளையாடினர்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோரும் சதுரங்கம் விளையாடினர்.



இதில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.



மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோ வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...