12-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ-மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து மாணவ- மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் பொதுத் தேர்வு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வுகள் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான திறனாய்வு தேர்வு இன்று நடத்தப்பட்டது.

திருப்பூர் பெரிய கடைவீதியில் உள்ள கே எஸ் சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வில் திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் உயர் கல்விக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை இன்று திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி துவக்கி வைத்தார். மாவட்டத்திற்கு 75 பேர் என தமிழ்நாடு முழுவதும் 2000 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான திறனாய்வு தேர்வு இன்று நடத்தப்பட்டது.
திருப்பூர் பெரிய கடைவீதியில் உள்ள கே எஸ் சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வில் திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் உயர் கல்விக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை இன்று திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி துவக்கி வைத்தார். மாவட்டத்திற்கு 75 பேர் என தமிழ்நாடு முழுவதும் 2000 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.