கோவையில் முழு போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் 'டயானா' உடல் அடக்கம்..!

போதை பொருள் கண்டுபிடிப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு டயானா, கடந்த 2017 முதல் 2022 வரை சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 09.01.2022ம் தேதி முதல் உடல் நிலை சரியில்லாமல் (கிட்னி பிரச்சனை) சிரமப்பட்டு வந்தது.



கோவை: கோவை மாநகர துப்பறியும் பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் “டயானா” உரிய மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பிறந்தது "டயானா". கடந்த 01.07.2017ம் தேதி முதல் மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 01.11.2017 முதல் 29.04.2018 வரை 6 மாத காலம் போதை பொருட்கள் கண்டுபிடிப்பு பயிற்சி பெற்று, இரயில் நிலையம் ஏர்போர்ட், பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 09.01.2022ம் தேதி முதல் உடல் நிலை சரியில்லாமல் (கிட்னி பிரச்சனை) சிரமப்பட்டு வந்தது.

சென்னையில் உள்ள அரசு பன்முக கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தது. பின்னர், சிகிச்சை முடிந்து 08.07.2022ம் தேதி சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, வேப்பேரியில் சிகிச்சை முடித்து மீண்டும் கோவைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 02.00 மணியளவில் துப்பறியும் நாய் "டயானா" கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படைப் பிரிவில் உயிரிழந்தது.

கோவை அரசு பன்முக கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் மரணமடைந்த டயானாவின் உடல், துப்பறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, துப்பறியும் பிரிவு உயர் அதிகாரிகள் தலைமையில் காவல்துறையினர் மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...