கடும் எதிர்ப்பால் கோவையில் பீட்டாவின் துணையான ஹெச்ஏஎஸ்-யின் சித்ரா இசை நிகழ்ச்சி ரத்து


கோவையில் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (ஹெச்ஏஎஸ்) சார்பில் நடைபெறவிருந்த பிரபல பாடகி சித்ரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி மக்களின் கடும் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களுமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் துணை அமைப்புகள் வெளிநாட்டு நிதியின் ஊக்கத்தால் அடங்க மறுத்து வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு துணையான ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் வரும் 29-ந் தேதியன்று பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது அந்த அமைப்பு. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அப்பணத்தைக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தகவல் வெளியிட்டனர்.

தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தைப்பெற்று அதில் தமிழக மக்களின் பாரம்பரிய அடையாளத்தையே அழிக்கும் இந்நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அலறிப் போன பீட்டாவின் குட்டி ஹுயுமன் அனிமல் சொசைட்டி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...