2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் 20-கோடி அளவில் கடன் உதவி வழங்க இலக்கு: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



கோவை: 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் 20-கோடி அளவில் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38-நபர்களுக்கு 66.96-லட்சம் மானியத்துடன் கூடிய 2.23 கோடி கடனுதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 34 நபர்களுக்கு 56.36 லட்சம் மானியத்துடன் கூடிய 1.87 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 360 மகளிர் குழுக்களுக்கு 75 லட்சம் மானியத்துடன் கூடிய 2.50 கோடி கடன் உதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியின வகுப்பை சார்ந்த 18 நபர்களுக்கு 49.50 லட்சம் மானியத்துடன் கூடிய 1.65 கோடி கடன் உதவியும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 156 நபர்களுக்கு 2.16 கோடி மானியத்துடன் கூடிய 5.20 கோடி கடன் உதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 114 நபர்களுக்கு 7.20 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 696 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4.80 கோடிக்கண உதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடனுதவி வழங்க எனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...