2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை: 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் 20-கோடி அளவில் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38-நபர்களுக்கு 66.96-லட்சம் மானியத்துடன் கூடிய 2.23 கோடி கடனுதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 34 நபர்களுக்கு 56.36 லட்சம் மானியத்துடன் கூடிய 1.87 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 360 மகளிர் குழுக்களுக்கு 75 லட்சம் மானியத்துடன் கூடிய 2.50 கோடி கடன் உதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியின வகுப்பை சார்ந்த 18 நபர்களுக்கு 49.50 லட்சம் மானியத்துடன் கூடிய 1.65 கோடி கடன் உதவியும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 156 நபர்களுக்கு 2.16 கோடி மானியத்துடன் கூடிய 5.20 கோடி கடன் உதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 114 நபர்களுக்கு 7.20 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 696 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4.80 கோடிக்கண உதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடனுதவி வழங்க எனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.