கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - பட்டபகலில் துணிகரம்…!

பீரோ உடைக்கப்பட்டு 3.3 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் திருட்டு நடந்த வீட்டிற்க்கு வந்து, பீரோ மற்றும் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி பகுதி குருவாயூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மஞ்சு என்பவருடன் வசித்து வருகிறார்.

இன்று காலை 9 மணிக்கு வெங்கடேஷ் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், 11.45 மணியளவில் அவரது மனைவி மஞ்சு, ஓத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சுமார் 2 மணி நேர இடைவெளிக்குள்அவரது வீட்டின் அருகே வசிக்கும் ருக்மணி என்பவர் மஞ்சுவை அழைத்து, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த மஞ்சு, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3.3 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேஷுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வெங்கடேஷ்அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர்திருட்டு நடந்த வீட்டிற்க்கு வந்து, பீரோ மற்றும் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...