எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை – கோவை எட்டிமடையில் பேக்கரிக்கு சீல் வைப்பு..!

கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த எட்டிமடையில் உள்ள அமிர்தா பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குடோன்களில் பதுக்கி வைக்கும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



அதே போல் சில்லறை விற்பனையை தடுக்கவும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் முறையில் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளருக்கு ரூ.5-ஆயிரம் அபராதம், இரண்டாம் முறை பிடிபட்டால் ரூ.10- ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், 4-ஆவது முறையாக குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை எட்டிமடை பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் லீலா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான அமிர்தா பேக்கரியில் கடந்த செப்-2021 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்ததாக அபராதம் விதிக்கப்பட்டு, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



ஆனால், தொடர்ந்து இதே போல் குட்கா பொருட்களை விற்பனை செய்ததால் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிகம் வரக்கூடிய பேக்கரியில் மீண்டும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததால், மதுக்கரை போலீஸ் ஆய்வாளர் வைரம், கே.ஜி.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோருடன் சென்ற மதுக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரியை மூடி சீல் வைத்தனர். மேலும், கடையில் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்து, அதற்கான அறிவிப்பு நோட்டீஸை ஒட்டிச் சென்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...