இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது - காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண பேரணி, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி கென்னடி திரையரங்கு அருகே உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஷ்வர சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.


கோவை: இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண பேரணி, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி கென்னடி திரையரங்கு அருகே உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது.



பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்ககூட்டம் கிராம கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.



இதில், கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசுசுகையில், இந்து உரிமை மீட்பு பிரச்சாரமானது, கடந்த ஜூன் 28 ஆம் தேதி திருச்செந்தூரில் துவங்கி இன்று 18 ஆம் தேதி கோவையில் மிக சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த பேரணி ஜுலை 31ஆம் தேதி சென்னையில் நிறைவடைவதாக தெரிவித்தார்.

"இந்து கோயில்கள், இந்து நிலங்கள் இந்த அரசாங்கம் கையில் இருக்கின்றது. அதன் மூலமாக, பல்வேறு ஊழல்கள் நடந்து வருகிறது. ஆனால், பிற மதத்தவர்களின் சொத்து மற்றும் வருமானங்கள் அவர்களிடம் தான் உள்ளது. அவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் மத மாற்றம் மற்றும் அவர்கள் மத வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர்.



மாறாக, இந்து கோவிலின் வருமானங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்துக்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளது. ஆனால், மற்ற மதத்தினவருக்கு எந்த தடைகளும் இல்லை. பிற மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், இந்து ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை மறுக்கப்படுகிறது.



இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்ட, தீர்வு காண இந்த பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. பிற மதத்தவர்களை ஹிந்துக்கள் குறை சொன்னால் அவர்களை உடனடியாக நள்ளிரவில் கைது செய்யும் அரசு, இந்துக்களின் கோயில்களையும், சிலைகளையும் தவறாக பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது", என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டினர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...