கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 565 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டு 565 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழகம் முழுவதும் "ஆபரேஷன் 2.0" என்ற பெயரில் போதை பொருள் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அந்த குடோனில் சோதனை மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 565 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த எஸ்வந்த் (22), நிஷாந்த் (24) என்ற இருவரையும் கைது செய்தனர்.

இந்த புகையிலை குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...