தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டு 565 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: தமிழகம் முழுவதும் "ஆபரேஷன் 2.0" என்ற பெயரில் போதை பொருள் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அந்த குடோனில் சோதனை மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 565 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த எஸ்வந்த் (22), நிஷாந்த் (24) என்ற இருவரையும் கைது செய்தனர்.
இந்த புகையிலை குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அந்த குடோனில் சோதனை மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 565 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த எஸ்வந்த் (22), நிஷாந்த் (24) என்ற இருவரையும் கைது செய்தனர்.
இந்த புகையிலை குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.