கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை - ரூ.6 ஆயிரம் அபராதம்…!

அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான இருந்த குற்றத்துக்காக, பிரதாப் என்பவருக்கு 2.6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.


கோவை: கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது இருசக்கர வாகனத்தில் பீளமேடு பெரிய தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பிரதாப் என்பவர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டி வந்து குருசாமி மீது மோதி உள்ளார். விபத்தில் தூக்கி வீசப்பட்ட குருசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக, கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான இருந்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ 6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...