44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர்...!

வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய் அலுவலர் செஸ் விளையாடினார்.


கோவை: வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அந்த சின்னமானது சுவரொட்டிகள் மூலமாகவும் பேனர்கள் மூலமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு, செஸ் போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு ஈர்ப்பு ஏற்படும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...