சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது, திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர், இன்று காலை ஈச்சனாரி அருகே அவர் தங்கியிருந்த அறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (19). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக அவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது, திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (19). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக அவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது, திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.