சிங்கப்பூரில் வேலை - இளைஞர்களிடம் பணம் சுருட்டிய தனியார் நிறுவன அதிகாரி கோவையில் கைது..!

மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் அதிகாரியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி பணம் ரூ.21-லட்சம், மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: சிங்கப்பூருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 170-பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ஈரோடு, மதுரை, மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், கோவையை அடுத்த வடவள்ளி மருதமலை சாலையில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் 22-ந் தேதியும், 29-ந் தேதியும் சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவித்தனர்.

அதில், உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ.3-லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் என்ஜினீயர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150 க்கும் மேற்பட்டோர் அவர்கள் சொன்ன வேலைக்கு தகுந்தவாறு ரூ.1 லட்சம், முதல் ரூ.2 லட்சம் வரை என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினர்.

பின்னர், தங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நேரில் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. விசாரித்ததில் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளராக ராமமூர்த்தி, அதிகாரி மோகன கிருஷ்ணன், மற்றும் ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் சுமார் 170 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். புகார் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரி கோவில் பாளையத்தைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் (42) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி பணம் ரூ.21 லட்சம், மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மோகனகிருஷ்ணன் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. நிறுவனத்தின் உரிமையாளரான ராமமூர்த்தி உள்ளிட்ட 3-பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...