கோவையில் மது போதையில் ஆட்டோவை ஓட்டி விபத்து - சாலையில் சென்ற பள்ளி மாணவிகள் சாக்கடையில் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு..!

விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே ஆட்டோ மோதியதில் 3-பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

கோவையை அடுத்த துடியலூர் காவல் நிலையம் அருகே ஆட்டோ ஒன்று வேகமாக வந்ததுள்ளது. அந்த ஆட்டோ திடீரென்று அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி உள்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், அவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த ஆட்டோவுடன் டிரைவரும் சாக்கடைக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று சாக்கடைக்குள் இறங்கி 4 பேரையும் மீட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசாரும் விரைந்து வந்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ டிரைவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ஆட்டோவை ஓட்டி வந்தவர் தொப்பம் பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் பழைய ஆட்டோவை விலைக்கு வாங்கியதும், மது குடித்து விட்டு போதையில் அவர் ஆட்டோ ஓட்டி வந்ததால் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.

எனவே அவர் மது போதையில் இருப்பதை உறுதி செய்ய போலீசார் கருவி மூலம் சோதனை நடத்த முயன்றனர். அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் ஒரு வழியாக மோகன்ராஜிடம் போலீசார் மது போதை சோதனை நடத்தினர். மேலும் விபத்து குறித்து மோகன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...