வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து வேறு பகுதியில் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரி, மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து வேறு பகுதியில் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.