சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்: கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க பொள்ளாச்சியில் விழிப்புணர்வு..!

செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.


கோவை: சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க பொள்ளாச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருகின்ற ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகள் குறித்து பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகளும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...