செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
கோவை: சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க பொள்ளாச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வருகின்ற ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகள் குறித்து பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகளும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வருகின்ற ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகள் குறித்து பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகளும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.