நீலகிரியில் தொடர் மழை: குந்தா உட்பட 3-அணைகள் திறப்பு..!

குந்தா, 89 அடி, பில்லுார், 100 அடி, சாண்டிநல்லா, 49 அடி என, மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டு, மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், குந்தா, சாண்டிநல்லா, பில்லூர் அணைகள் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கூடலூரில், 227 மி.மீ., அவலாஞ்சியில் 195, அப்பர் பவானியில் 179 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பலத்த காற்று வீசியதால், ஊட்டியின் பல இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. எச்.பி.எப்., பகுதியில் மரம் விழுந்து, ஒரு கார் சேதமானது. ஏ.டி.சி., பிரதான சாலையில் மரம் விழுந்து, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அறுந்து விழுந்த மின்கம்பி ஊட்டி தலைகுந்தாவில், பலத்த காற்றுக்கு, 110 கே.வி., உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

மின்தடை ஏற்பட்டு இருந்தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எடக்காடு பகுதியில், தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டு தேயிலை செடிகள் அடித்து செல்லப்பட்டன.

இத்தலார், எமரால்டு, பாலாடா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. 'அடுத்த இரண்டு நாட்கள் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் பேரிடர் தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

மூன்று அணைகள் திறப்பு அணைகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. குந்தா, 89 அடி, பில்லுார், 100 அடி, சாண்டிநல்லா, 49 அடி என, மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டு, மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...