மக்களாட்சி வரவேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எதிர்பார்த்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர் எடப்பாடியார். மீண்டும் அவர் முதலமைச்சராக வருவார் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.


கோவை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னை சென்றிருந்த எதிர்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி இன்று கோவை திரும்பினார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை சிக்னலில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அங்கிருந்து, அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகமான, இதய தெய்வம் அம்மா மாளிகைக்கு நடந்து வந்த அவருக்கு தொண்டர்கள் பொன்னாடை அணிவித்தும், மலர் கொத்துகள் கொடுத்தும், தாமரை பூக்களால் ஆன மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதாவின் ஆசியுடன் கழக பொது செயலாளராக பொது குழு உறுப்பினர்களால், மக்களால் எதிர்பார்த்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக மக்களுக்கு எழுச்சி மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது, என்றார்.

மீண்டும் அதிமுக வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என எஸ். பி வேலுமணி, அதற்கு ஒற்றை தலைமை வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கோவையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. எடப்பாடியார், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும், என்று தெரிவித்தார்.

மீண்டும் மக்களாட்சி வர வேண்டும் என்றால் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் என அனைவரும் முடிவு செய்துள்ளார்கள் என தெரிவித்தார். தற்பொழுது, அதிமுக தலைமை நிலைய செயலாளராக எனக்கு பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எதிர்பார்த்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர் எடப்பாடியார். மீண்டும் அவர் முதலமைச்சராக வருவார் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்கள் (அதிமுக எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள்) அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். தலைமைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மீண்டும் சேர்ந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை தலைமை கழகம் தான் முடிவு செய்யும் என்று பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...