இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் - திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி..!

இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடைமையாக்கியது போல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆலயங்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் பிரச்சார பயணம் கடந்த மாதம் 28 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து தொடங்கியது.



அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டு இந்த பிரச்சார பயணம் இன்று திருப்பூர் வந்தடைந்தது.



இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் கடந்த ஜூன் 28ம் தேதி திருச்செந்தூரில் துவங்கியது. தற்போது 17 வது நாளாகத் திருப்பூர் வந்துள்ளோம்.

இங்கு இந்த பிரச்சாரம் குறித்த பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் தொடங்கிய நாள் முதலே அனைத்து மாவட்டங்களிலும் அமோக வரவேற்பு உள்ளது. இந்துக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செல்லும் இடங்களிலும் மக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இந்து கோவில்களின் உரிமை மீட்கப்பட்ட வேண்டும். இந்து கோவில்களின் சொத்துக்களில் வரும் வருமானங்களை அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் முஸ்லிம்களின் மசூதிகளில் வரும் வருமானங்களை அவர்களின் தனி அமைப்புகள் நிர்வகிக்கிறது.

எனவே இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடைமையாக்கியது போல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆலயங்களையும் அரசுடைமையாக்க வேண்டும். பள்ளிகளில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைகள் இந்து மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளில் இந்து மாணவர்களின் உதவித்தொகை பறிக்கப்படுகிறது.



தமிழகத்தில் இந்து கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது அதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே அரசு உடனடியாக இந்து கோவில்களில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க வேண்டும். போலி பாஸ்போர்ட் தயாரிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக அரசு கைது செய்ய வேண்டும்.

இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தில் பல்வேறு இடர்பாடுகள் இடைஞ்சல்களை சந்திக்க நேர்ந்தது இருப்பினும் இந்த பயணம் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர்.

திருப்பூரில் நடந்த சம்பவத்தில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காவல் துறையும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் செயல்பட்டு உள்ளனர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...