ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளை தலைவர் சமர்ப்பிப்பதில்லை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிப்பதில்லை, ஊராட்சியில் 90-லட்சம் ரூபாய் நிதி இருந்தும் குடிநீர், சாக்கடை, கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.
கோவை: ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில் நிதி இருந்தும் மக்கள் பணிகளை மேற்கொள்ளாததைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சபரிநித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7-வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு வரவு செலவு, கணக்கு விவரங்கள் சமர்ப்பிப்பதில்லை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை என உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியேறினர்.

இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரேமலதா, நர்மதா, மயில்சாமி உள்ளிட்ட நான்கு பேரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளை தலைவர் சமர்ப்பிப்பதில்லை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிப்பதில்லை, ஊராட்சியில் 90-லட்சம் ரூபாய் நிதி இருந்தும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாக்கடை, கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
இது குறித்து வார்டு உறுப்பினர்கள் முறையிட்டால் அலட்சியத்துடன் பதில் பேசுவதாக குற்றம் சாட்டிய உறுப்பினர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும், எனவே முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சபரிநித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7-வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு வரவு செலவு, கணக்கு விவரங்கள் சமர்ப்பிப்பதில்லை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை என உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியேறினர்.
இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரேமலதா, நர்மதா, மயில்சாமி உள்ளிட்ட நான்கு பேரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளை தலைவர் சமர்ப்பிப்பதில்லை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிப்பதில்லை, ஊராட்சியில் 90-லட்சம் ரூபாய் நிதி இருந்தும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாக்கடை, கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
இது குறித்து வார்டு உறுப்பினர்கள் முறையிட்டால் அலட்சியத்துடன் பதில் பேசுவதாக குற்றம் சாட்டிய உறுப்பினர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும், எனவே முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.