மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன.
கோவை: சித்திரை சாவடி அணையில் வழிந்தோடும் நீர், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரள - தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதீத மழை பெய்யும் என வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை பொழிவு என்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.
இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம் இருக்காது என மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
புறநகர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு பேருதவியாக இருக்கும் என்கின்றனர். குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வு கிணற்றில் தண்ணீர் ஊற்று உள்ளிட்டவற்றால் பொதுமக்களின் குடிநீர் தேவையும் விவசாய பாசனத்திற்கான தண்ணீரும் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
கோவையில், உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் இந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கால் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன. ஒருபுறம் மழையால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இயற்கை ஒரு எச்சரிக்கை அடித்திருக்கிறது.
நெகிழிக் குப்பைகளை சுற்றுலாப் பயணிகள் சிறுவாணி பகுதியில் தூக்கி எறிந்து வந்த நிலையில் அவை அனைத்தும் ஒரு சேர்ந்து சித்திரைச்சாவடி அணையில் ஒதுங்கி இருக்கின்றன. இது போன்று தொடர்ந்து நெகிழிக் குப்பைகள் வீசப்பட்டால் அது மனிதர்களுக்கு முரணானது என்பதனை அது சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.
எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தேவையும் ஏற்பட்டிருக்கும் நிலையில் கரையோரப் பகுதிகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல கூடாது என அதிகாரிகள் பொதுமக்கள் கிராமவாசிகளை வாய்மொழில் உத்தரவிலே பிறப்பித்திருக்கின்றனர்.