சித்திரைச்சாவடி அணையில் வழிந்தோடும் நீர், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன.



கோவை: சித்திரை சாவடி அணையில் வழிந்தோடும் நீர், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரள - தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதீத மழை பெய்யும் என வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை பொழிவு என்பது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம் இருக்காது என மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.



புறநகர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு பேருதவியாக இருக்கும் என்கின்றனர். குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வு கிணற்றில் தண்ணீர் ஊற்று உள்ளிட்டவற்றால் பொதுமக்களின் குடிநீர் தேவையும் விவசாய பாசனத்திற்கான தண்ணீரும் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.

கோவையில், உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் இந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கால் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன. ஒருபுறம் மழையால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இயற்கை ஒரு எச்சரிக்கை அடித்திருக்கிறது.

நெகிழிக் குப்பைகளை சுற்றுலாப் பயணிகள் சிறுவாணி பகுதியில் தூக்கி எறிந்து வந்த நிலையில் அவை அனைத்தும் ஒரு சேர்ந்து சித்திரைச்சாவடி அணையில் ஒதுங்கி இருக்கின்றன. இது போன்று தொடர்ந்து நெகிழிக் குப்பைகள் வீசப்பட்டால் அது மனிதர்களுக்கு முரணானது என்பதனை அது சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.

எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தேவையும் ஏற்பட்டிருக்கும் நிலையில் கரையோரப் பகுதிகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல கூடாது என அதிகாரிகள் பொதுமக்கள் கிராமவாசிகளை வாய்மொழில் உத்தரவிலே பிறப்பித்திருக்கின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...