கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை தூக்கி கொண்டு வனப்பகுதியில் வந்த தந்தையின் வீடியோ வைரல்..!

அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தவர்கள். 4-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியபடி வனப்பகுதி வழியாகவும் தொங்கு பாலம் வழியாகவும் கிராமத்தை சென்றடைந்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை தூக்கி கொண்டு வனப்பகுதியில் வந்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதி முருகலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர்கள் ஐயப்பன், சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து நான்கு மாதங்களே ஆன சஜேஸ்வரி என்ற பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் தம்பதியினரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.



பாலக்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.



அப்போது தாடிக்கொண்டு என்ற பகுதி வரை மட்டுமே சாலை வசதி இருந்ததால் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது கிராமத்திற்குக் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியபடி ஐயப்பன் வனப்பகுதி வழியாகவும் தொங்கு பாலம் வழியாகவும் கிராமத்தை சென்றடைந்துள்ளார்.



அந்த காட்சிகளை அவருடன் வந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...