கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட் அருகே உள்ள பழைய பூ மார்க்கெட் பகுதிக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை பூ மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நமக்கு நாமே திட்ட மதிப்பீட்டு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட் அருகே உள்ள பழைய பூ மார்க்கெட் பகுதிக்கு கோவைமாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பழைய பூ மார்க்கெட்டில் உள்ள 140-மேடை கடைகள், புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பூ மார்க்கெட் வியாபார சங்கத்தினர் ஆகியோர் இருந்தனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட் அருகே உள்ள பழைய பூ மார்க்கெட் பகுதிக்கு கோவைமாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பழைய பூ மார்க்கெட்டில் உள்ள 140-மேடை கடைகள், புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பூ மார்க்கெட் வியாபார சங்கத்தினர் ஆகியோர் இருந்தனர்.