சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்


குடியரசு தினத்தை முன்னிட்டு நரேந்திரமோடியின் புகைப்படம் மற்றும் தேசியகொடி அச்சிடப்பட்ட  சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாட்டின் 68வது குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுஇருந்தது, இந்த சுவரொட்டிகளில் பாரத பிரதமர்நரேந்திர மோடியில் புகைப்படம், தேசிய கொடியின் படம் உட்பட வாழ்த்து செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது, குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உதயராஜ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களை நிலைய காவலர் சபீர் பாஷா ஆகியோர் கிழித்ததாக கூறி தேசிய கொடியை அவமதித்த அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...