விவாகரத்து தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(32) தென்னை மட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோட்டூரை சேர்ந்த உதயகுமார்- நித்தியலட்சுமி ஆகியோரது மகள் சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. இதனால், அவரது மனைவியின் தாய் நித்தியலட்சுமி தனது மகளுக்கு விவாகரத்து கேட்டு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சரவணகுமார் ஆகியோர் கோட்டூரில் நித்தியலட்சுமி நடத்தி வரும் கடைக்கு சென்று, விவாகரத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, ஏற்பட்ட தகராறின் போது சந்தோஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நித்தியலட்சுமி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(32) தென்னை மட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோட்டூரை சேர்ந்த உதயகுமார்- நித்தியலட்சுமி ஆகியோரது மகள் சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. இதனால், அவரது மனைவியின் தாய் நித்தியலட்சுமி தனது மகளுக்கு விவாகரத்து கேட்டு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சரவணகுமார் ஆகியோர் கோட்டூரில் நித்தியலட்சுமி நடத்தி வரும் கடைக்கு சென்று, விவாகரத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, ஏற்பட்ட தகராறின் போது சந்தோஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நித்தியலட்சுமி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.