ஈமூ கோழி மோசடி வழக்கு - 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…!

மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது.


நாமக்கல்லில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜம்புகுமார் (52). இவர் நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆர்.ஓய்.ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினர். இந்த நிறுவனத்தில் சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் பணியாற்றினர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கில் லாபம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தனர். இதனை நம்பிய 172 முதலீட்டாளர்கள் ரூ.4 கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 70-ஐ இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், இவர்கள் உறுதி அளித்தபடி லாபம் வழங்காமல் மோசடி செய்துவிட்டு சென்றதாக புகார் எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ஜம்புகுமார், சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து அளிக்கவும் உத்தரவிட்டார்.

தீர்ப்பு கூறும் நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இனுக் ஆன்ட்ரூஸ்க்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததை அடுத்து அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...