7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பெருவாரிப்பள்ளம் பகுதியில், 26 மி.மீ, பொள்ளாச்சியில் 21 மில்லி மீட்டர், தூணக்கடவு பகுதியில் 17 மில்லி மீட்டர், மணக்கடவு பகுதியில் 15 மில்லி மீட்டர் நெகமம் பகுதியில் 13 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பெருவாரிப்பள்ளம் பகுதியில், 26 மி.மீ, பொள்ளாச்சியில் 21 மில்லி மீட்டர், தூணக்கடவு பகுதியில் 17 மில்லி மீட்டர், மணக்கடவு பகுதியில் 15 மில்லி மீட்டர் நெகமம் பகுதியில் 13 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.