கோவை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை..!

7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.



பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.



தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பெருவாரிப்பள்ளம் பகுதியில், 26 மி.மீ, பொள்ளாச்சியில் 21 மில்லி மீட்டர், தூணக்கடவு பகுதியில் 17 மில்லி மீட்டர், மணக்கடவு பகுதியில் 15 மில்லி மீட்டர் நெகமம் பகுதியில் 13 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...