அதிமுக நிலை மன வருத்தம் அளிக்கிறது - கவலைப்படும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் கதிரவன்..!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும், எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா வளர்த்த கட்சியின் நிலை கண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மன வருத்தம் அடைவதாகவும் திருப்பூரில் பேட்டியளித்தார்.


திருப்பூர்: எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அதிமுகவின் தற்போதைய நிலை மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர் கதிரவன் திருப்பூரில் பேட்டியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கதிரவன் கலந்து கொண்டார்.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும், எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா வளர்த்த கட்சியின் நிலை கண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மன வருத்தம் அடைவதாகவும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது மத்திய அரசின் செலவில் பயிற்சி கொடுக்கப்பட்டு இளைஞர்களை பாஜகவிற்கு சேர்க்கும் முயற்சி எனவும் தெரிவித்தார்.

நூல் விலை உயர்வால் திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை என்ற நிலை இருப்பதாகவும் அதனை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் பணத்தைக் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...