பருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் சிறப்பு நிதியை ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

சட்டமன்றத்தில் அறிவித்த கோவை தூத்துக்குடி வரையிலான தார் சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தொழில் முனைவோர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டு செயல் வடிவம் கொடுத்து அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்ற நிதி ஆதாரங்களை ஒதுக்கி உள்ளார் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...