பருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் சிறப்பு நிதியை ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

சட்டமன்றத்தில் அறிவித்த கோவை தூத்துக்குடி வரையிலான தார் சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தொழில் முனைவோர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டு செயல் வடிவம் கொடுத்து அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்ற நிதி ஆதாரங்களை ஒதுக்கி உள்ளார் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...