'பாதசாரிகளுக்கு வழி விடுங்கள்...!' போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கோவை Ksirs பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்களை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி, கோவை KSirs பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து லட்சுமி மில்ஸ் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் KSirsஎன்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகள், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியஅவசியத்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சாலை விபத்துக்கள் நடக்க முக்கியகாரணமாக கருதப்படுவது,போக்குவரத்து விதிமீறல்கள் தான். குறிப்பாக, சிக்னல்களில் நிற்க பொறுமை இல்லாமல், சிவப்பு விளக்கு குறியீட்டை மீறி, வாகனங்களை இயக்குவதால், எதிர்புரம் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்களை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி, கோவை KSirs பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வுஏற்படுத்தினர். அதன்படி, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.



அப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "Travel Safe with Road Discipline", என்ற பேட்ஜ்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட பள்ளி தாளாளர்கள், லலிதா பிரகாஷ், தேவ பிரகாஷ், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.







Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...