சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
கோவை: பொள்ளாச்சியில் பலத்த காற்றுடன் மழை மகாலிங்கபுரத்தில் ராட்சத தைல மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது, மகாலிங்கபுரம் பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைல மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.

அப்போது, மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வனிதா மற்றும் தனியார் வங்கி ஊழியர் நந்தினி என்ற இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த இருவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது, மகாலிங்கபுரம் பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைல மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.
அப்போது, மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வனிதா மற்றும் தனியார் வங்கி ஊழியர் நந்தினி என்ற இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த இருவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.