கோவை பொள்ளாச்சியில் பலத்த காற்றுடன் மழை: ராட்சத தைல மரம் வேருடன் சாய்ந்த விபத்தில் 2-பெண்கள் படுகாயம்..!

சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சியில் பலத்த காற்றுடன் மழை மகாலிங்கபுரத்தில் ராட்சத தைல மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அப்போது, மகாலிங்கபுரம் பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைல மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.



அப்போது, மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வனிதா மற்றும் தனியார் வங்கி ஊழியர் நந்தினி என்ற இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த இருவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...