திருப்பூர் பழைய பேருந்து நிலையம்; கருணாநிதி பெயர் வைக்க வலுக்கும் எதிர்ப்பு..!

மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், கடந்த மாமன்ற கூட்டத்தொடரின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி கடந்த கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், மாமன்ற தீர்மான புத்தகத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.



இதற்கு திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஆட்சி காலத்தின் போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வாங்கிய பேட்டரி வாகனங்களில் பெருமளவு ஊழல் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இதனை விசாரிக்க தனி குழு நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் விதித்திருக்கும் நடை முறையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...