'மேட்ரிமோனி' வலைதளம் மூலம் கோவை பெண் மருத்துவரிடம் நூதன பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்..!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகே அண்ணா நகரை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் மனநல மருத்துவராக உள்ளேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார்.

மேலும், அவர் தான் இந்தியாவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற உள்ளதாகவும் கூறினார். எனவே இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய நான் அவருடன் பழகி வந்தேன்.

2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தோம். அதில் பேசிய பெண் ஒருவர் தான் டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்க வரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுஷன் ஜியான் தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்து இருப்பதாகவும், அவர் 1 லட்சம் யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சத்து 51 ஆயிரத்து 48 பணம் கொண்டு வந்து இருப்பதாகவும், இதற்கு வரியாக ரூ.19 லட்சத்து 59 ஆயிரத்து 920 பணத்தை உடனடியாக அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார்.

இதனையடுத்து, நான் உடனடியாக பணத்தை தயார் செய்து அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து நான் யுஷன் ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது தான் தெரிந்தது இது மோசடி கும்பலின் செயல் என்று. எனவே விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...