புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை பீளமேடு அருகே அண்ணா நகரை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் மனநல மருத்துவராக உள்ளேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார்.
மேலும், அவர் தான் இந்தியாவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற உள்ளதாகவும் கூறினார். எனவே இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய நான் அவருடன் பழகி வந்தேன்.
2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தோம். அதில் பேசிய பெண் ஒருவர் தான் டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்க வரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுஷன் ஜியான் தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்து இருப்பதாகவும், அவர் 1 லட்சம் யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சத்து 51 ஆயிரத்து 48 பணம் கொண்டு வந்து இருப்பதாகவும், இதற்கு வரியாக ரூ.19 லட்சத்து 59 ஆயிரத்து 920 பணத்தை உடனடியாக அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார்.
இதனையடுத்து, நான் உடனடியாக பணத்தை தயார் செய்து அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து நான் யுஷன் ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் தெரிந்தது இது மோசடி கும்பலின் செயல் என்று. எனவே விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் மனநல மருத்துவராக உள்ளேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார்.
மேலும், அவர் தான் இந்தியாவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற உள்ளதாகவும் கூறினார். எனவே இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய நான் அவருடன் பழகி வந்தேன்.
2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தோம். அதில் பேசிய பெண் ஒருவர் தான் டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்க வரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுஷன் ஜியான் தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்து இருப்பதாகவும், அவர் 1 லட்சம் யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சத்து 51 ஆயிரத்து 48 பணம் கொண்டு வந்து இருப்பதாகவும், இதற்கு வரியாக ரூ.19 லட்சத்து 59 ஆயிரத்து 920 பணத்தை உடனடியாக அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார்.
இதனையடுத்து, நான் உடனடியாக பணத்தை தயார் செய்து அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து நான் யுஷன் ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் தெரிந்தது இது மோசடி கும்பலின் செயல் என்று. எனவே விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.