அதிமுகவில் தற்போது நாடகம் நடக்கிறது - கோவையில் வி.சி.ஆறுகுட்டி பேட்டி…!

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும் தொண்டர்களிடமும் தான் கேட்க வேண்டும் எனவும், அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.


கோவை: அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டுள்ளது, கோடநாடு விசாரணைக்கு பின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பபட்டு இருந்தது.

காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டியளித்தார்.

அப்போது கனகராஜ் இரண்டு வருடங்கள் என்னிடம் ஓட்டுனராக இருந்ததால் அவர் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது என தெரிவித்தார். கடந்த முறை விசாரணையின் போது விடுபட்ட சில கேள்விகளை கேட்டார்கள், அதற்கு பதில் கொடுக்கப்பட்டது என தெரிவித்த அவர், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுப்பதாக காவல்துறையிடம் தெரிவித்து இருப்பதாகவும் ஆறுகுட்டி தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும் தொண்டர்களிடமும் தான் கேட்க வேண்டும் எனவும், அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மூன்றாண்டுகளுக்கு முன் கோத்தகிரியில் வைத்து ஒரு முறையும், கடந்த ஏப்ரல் மாதம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் ஒரு முறையும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...