வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து, பெற்றோர்கள் இனிப்புகள் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கோவை: அந்தமானில் அண்மையில் 6-வது தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாககோவையிலிருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர், பாலகிருஷ்ணன் தலைமையில் 10-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

இதில்,6-பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசுகளையும், 3-யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இனிப்புகள் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாககோவையிலிருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர், பாலகிருஷ்ணன் தலைமையில் 10-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
இதில்,6-பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசுகளையும், 3-யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இனிப்புகள் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.