கோவை துடியலூர் அருகே உணவக மாஸ்டரை அடித்துக் கொன்ற 5 திருநங்கைகள் கைது….!

கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக துடியலூர் அருகே, திருநங்கைகள் --ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 பேர் தர்மலிங்கத்தை அடித்து கொன்றுள்ளனர். துடியலூர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர்.


கோவை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (45). இவர் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தர்மலிங்கம் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதாக படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, இறந்த தர்மலிங்கத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முதுகு பகுதி, மார்பு, வயிற்று பகுதிகளில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரணமாக இருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றி விசாரணை தீவரபடுத்தப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக

துடியலூர் அருகே வைத்து, திருநங்கைகள் தர்மலிங்கத்தை தாக்கியுள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்து, படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதியானது.

துடியலூர் போலீசாரின் தொடர் விசாரணையில், தர்மலிங்கத்தை

அடித்துக் கொன்ற ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்துபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...