கோவை துடியலூர் அருகே உணவக மாஸ்டரை அடித்துக் கொன்ற 5 திருநங்கைகள் கைது….!

கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக துடியலூர் அருகே, திருநங்கைகள் --ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 பேர் தர்மலிங்கத்தை அடித்து கொன்றுள்ளனர். துடியலூர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர்.


கோவை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (45). இவர் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தர்மலிங்கம் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதாக படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, இறந்த தர்மலிங்கத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முதுகு பகுதி, மார்பு, வயிற்று பகுதிகளில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரணமாக இருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றி விசாரணை தீவரபடுத்தப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக

துடியலூர் அருகே வைத்து, திருநங்கைகள் தர்மலிங்கத்தை தாக்கியுள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்து, படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதியானது.

துடியலூர் போலீசாரின் தொடர் விசாரணையில், தர்மலிங்கத்தை

அடித்துக் கொன்ற ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்துபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...