பக்ரீத் பண்டிகையையொட்டி பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார், திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் பெண்ணின் ஆடையில் தீ பிடித்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவையில் சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு பெண் தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கோவை போத்தனூர் அருகே உள்ள சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா (45). இவர்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.
நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர். அவர்களுக்காக கேஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆயிஷாவின் ஆடையில் தீ பிடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ஆயிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.