இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCI) சார்பில் 'உழவே தலை' வேளாண் கருத்தரங்கம்..!

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அதனுடைய முக்கிய வருடாந்திர நிகழ்வான 'உழவே தலை' எனும் வேளாண் கருத்தரங்கு நான்காம் ஆண்டாக ஜூலை 16 இந்துஸ்தான் கலைக்கல்லூரி நவ இந்தியா பீளமேடு கோவையில் ஒரு முழு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCI) சார்பில் 'உழவே தலை' வேளாண் கருத்தரங்கம் ஜூலை 16 நடைபெற உள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அதனுடைய முக்கிய வருடாந்திர நிகழ்வான 'உழவே தலை' எனும் வேளாண் கருத்தரங்கு நான்காம் ஆண்டாக ஜூலை 16 இந்துஸ்தான் கலைக்கல்லூரி நவ இந்தியா பீளமேடு கோவையில் ஒரு முழு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.

பொதுவாக விவசாயிகளுக்கு மரம் என்பது விவசாயத்திற்கு இடையூறான என்ற புரிதல் 50 வருடங்களாக உள்ளது. ஆனால் மரம் விவசாயத்திற்கு எப்படி முக்கியமானது தென்னை தவிர வேறு மரங்கள் சாகுபடி செய்வது அதன் மூலம் வளம் பெருக்குவது அதற்குண்டான பயிற்சி மற்றும் பல சிறப்பம்சங்களை உருவாக்க உள்ளடக்கிய உழவே தலை 4.0 என்ற கருத்தரங்குக்கு முக்கியமான வல்லுநர்கள் வந்து உரையாற்ற இருக்கிறார்கள்.

Dr. T.N. பாலமோகன் Ph.D., PDF., தோட்டக்கலையில் பழ வகை மரங்களின் பயன்கள் அதற்குண்டான சந்தை பற்றி கூற இருக்கிறார்.

Dr. A. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் மண் வளம் நீர் வளம் சரியான மர வகையை தேர்ந்தெடுப்பது, அந்த கால குறுகிய கால மரங்கள் பற்றி உரையாற்ற இருக்கிறார்.

Z. ஜான் கென்னடி - பழங்களை வளர்ப்பதும் சந்தைப்படுத்துவது எவ்வாறு செய்வது என்பதை பற்றி விளக்குவார்.

D. சரவணன் - இயற்கை ஆர்வலர் மரங்கள் விவசாயத்துக்கு இடையூறு இல்லை என்பதை விளக்க இருக்கிறார்.

N. மணி சுந்தர் - வெற்றிகரமான விவசாயி, மரங்களை வளர்ப்பதற்கு உண்டான பொருளாதார ஆலோசனைகள் விவசாயத்திலிருந்து பெருக்குவதை பற்றி விளக்குவார்.

S. ராமன் - விவசாய வல்லுநர் பணம் தரும் மரங்களை பற்றி விளக்குவார்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கம் பெரிய விழிப்புணர்வை, மரம் வளர்ப்பு மற்றும் அதன் பலன்கள் பற்றி அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பது உறுதி.

இந்தியா போன்ற இயற்கை வளம் மிக்க மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டிற்கு மரங்கள் வளர்ப்பு அதன் பயன்கள் சந்தைப்படுத்தல் போன்றவற்றை விஞ்ஞான பூர்வமாக விளக்கும் இந்த கருத்தரங்கத்தை விவசாயிகளிடமும் நிலங்கள் வைத்திருந்து நீர்வளம் சரியாக இல்லாத நில உரிமையாளர்களிடம் அடுத்த தலைமுறைக்கு மரத்தின் மகத்துவத்தை எடுத்துச் செல்லவும்.

இது போன்ற விழிப்புணர்வு கொண்ட கருத்தரங்கங்கள் வேண்டும் என்பதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சபை கோவை நடத்துகிறது. அனைத்து தரப்பினரும் பெரும் அளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.

இதன் கட்டண விவரங்கள் மற்றும் மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள 0422-2224000 / 2224001, 9842221400.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...