இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCI) சார்பில் 'உழவே தலை' வேளாண் கருத்தரங்கம்..!

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அதனுடைய முக்கிய வருடாந்திர நிகழ்வான 'உழவே தலை' எனும் வேளாண் கருத்தரங்கு நான்காம் ஆண்டாக ஜூலை 16 இந்துஸ்தான் கலைக்கல்லூரி நவ இந்தியா பீளமேடு கோவையில் ஒரு முழு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCI) சார்பில் 'உழவே தலை' வேளாண் கருத்தரங்கம் ஜூலை 16 நடைபெற உள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அதனுடைய முக்கிய வருடாந்திர நிகழ்வான 'உழவே தலை' எனும் வேளாண் கருத்தரங்கு நான்காம் ஆண்டாக ஜூலை 16 இந்துஸ்தான் கலைக்கல்லூரி நவ இந்தியா பீளமேடு கோவையில் ஒரு முழு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.

பொதுவாக விவசாயிகளுக்கு மரம் என்பது விவசாயத்திற்கு இடையூறான என்ற புரிதல் 50 வருடங்களாக உள்ளது. ஆனால் மரம் விவசாயத்திற்கு எப்படி முக்கியமானது தென்னை தவிர வேறு மரங்கள் சாகுபடி செய்வது அதன் மூலம் வளம் பெருக்குவது அதற்குண்டான பயிற்சி மற்றும் பல சிறப்பம்சங்களை உருவாக்க உள்ளடக்கிய உழவே தலை 4.0 என்ற கருத்தரங்குக்கு முக்கியமான வல்லுநர்கள் வந்து உரையாற்ற இருக்கிறார்கள்.

Dr. T.N. பாலமோகன் Ph.D., PDF., தோட்டக்கலையில் பழ வகை மரங்களின் பயன்கள் அதற்குண்டான சந்தை பற்றி கூற இருக்கிறார்.

Dr. A. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் மண் வளம் நீர் வளம் சரியான மர வகையை தேர்ந்தெடுப்பது, அந்த கால குறுகிய கால மரங்கள் பற்றி உரையாற்ற இருக்கிறார்.

Z. ஜான் கென்னடி - பழங்களை வளர்ப்பதும் சந்தைப்படுத்துவது எவ்வாறு செய்வது என்பதை பற்றி விளக்குவார்.

D. சரவணன் - இயற்கை ஆர்வலர் மரங்கள் விவசாயத்துக்கு இடையூறு இல்லை என்பதை விளக்க இருக்கிறார்.

N. மணி சுந்தர் - வெற்றிகரமான விவசாயி, மரங்களை வளர்ப்பதற்கு உண்டான பொருளாதார ஆலோசனைகள் விவசாயத்திலிருந்து பெருக்குவதை பற்றி விளக்குவார்.

S. ராமன் - விவசாய வல்லுநர் பணம் தரும் மரங்களை பற்றி விளக்குவார்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கம் பெரிய விழிப்புணர்வை, மரம் வளர்ப்பு மற்றும் அதன் பலன்கள் பற்றி அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பது உறுதி.

இந்தியா போன்ற இயற்கை வளம் மிக்க மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டிற்கு மரங்கள் வளர்ப்பு அதன் பயன்கள் சந்தைப்படுத்தல் போன்றவற்றை விஞ்ஞான பூர்வமாக விளக்கும் இந்த கருத்தரங்கத்தை விவசாயிகளிடமும் நிலங்கள் வைத்திருந்து நீர்வளம் சரியாக இல்லாத நில உரிமையாளர்களிடம் அடுத்த தலைமுறைக்கு மரத்தின் மகத்துவத்தை எடுத்துச் செல்லவும்.

இது போன்ற விழிப்புணர்வு கொண்ட கருத்தரங்கங்கள் வேண்டும் என்பதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சபை கோவை நடத்துகிறது. அனைத்து தரப்பினரும் பெரும் அளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.

இதன் கட்டண விவரங்கள் மற்றும் மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள 0422-2224000 / 2224001, 9842221400.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...