மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: ஊட்டியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் பல இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலா, 103 மி.மீ., அவலாஞ்சி, 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சமாக, 14 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே சாலையில் குறுக்கே மரம் விழுந்தது.
அதேபோல், கிளன்மார்கன், பார்சன்ஸ்வேலி, கோரகுந்தா, அவலாஞ்சி சாலைகளில் ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில்,"மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை, 42-மண்டல குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலா, 103 மி.மீ., அவலாஞ்சி, 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சமாக, 14 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே சாலையில் குறுக்கே மரம் விழுந்தது.
அதேபோல், கிளன்மார்கன், பார்சன்ஸ்வேலி, கோரகுந்தா, அவலாஞ்சி சாலைகளில் ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில்,"மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை, 42-மண்டல குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.