நீலகிரியில் தொடர் மழையால் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: ஊட்டியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் பல இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலா, 103 மி.மீ., அவலாஞ்சி, 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சமாக, 14 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே சாலையில் குறுக்கே மரம் விழுந்தது.

அதேபோல், கிளன்மார்கன், பார்சன்ஸ்வேலி, கோரகுந்தா, அவலாஞ்சி சாலைகளில் ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில்,"மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை, 42-மண்டல குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...