இந்து கடவுளை அவமதித்ததாக ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.
கோவை: ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மாநில மற்றும் மத்திய அரசுக்கு புகார் மனு அனுப்ப உள்ளனர்.

மதுரையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை இந்து கடவுள் காளி புகை பிடிப்பதை போல ஆவணப்படம் தயாரித்து உள்ளதாகவும், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கிய காளி என்ற படத்தின் போஸ்டரை பதிவிட்டு காளியை அவமதித்ததாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மத்திய உள்துறை வெளியுறவு துறை அமைச்சகத்திற்கும் தமிழக தலைமைச் செயலகத்திற்கும் கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக புகார் மனு அனுப்ப உள்ளனர்.

இதற்கான மனுவைகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் வழங்கினார்.
மதுரையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை இந்து கடவுள் காளி புகை பிடிப்பதை போல ஆவணப்படம் தயாரித்து உள்ளதாகவும், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கிய காளி என்ற படத்தின் போஸ்டரை பதிவிட்டு காளியை அவமதித்ததாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மத்திய உள்துறை வெளியுறவு துறை அமைச்சகத்திற்கும் தமிழக தலைமைச் செயலகத்திற்கும் கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக புகார் மனு அனுப்ப உள்ளனர்.
இதற்கான மனுவைகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் வழங்கினார்.