பலமுறை புகார் அளித்தும் கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், மனமுடைந்த மனைவி தனது கணவனை கள்ளக்காதலியிடம் இருந்து மீட்டு தரக்கோரி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலியிடம் இருந்து தனது கணவரை மீட்டு தரக்கோரி மனைவி காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, வெங்கடேஷ் தம்பதியினர் இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தபெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அப்பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி இருபதுக்கு மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தரக்கோரி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, வெங்கடேஷ் தம்பதியினர் இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தபெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அப்பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி இருபதுக்கு மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தரக்கோரி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.