கோவையில் நாளை (ஜூலை 9) போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள்..!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, நாளை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி காலை 07.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களும், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளதாக மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...