ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரிடம் 114 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
கோவை: கோவையில் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாநகரில் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுவரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தடாகம் ரோடு எரிமேடு, முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் தகவல்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த திருஞானம் (25), சாய்பாபா காலனியை சேர்ந்த அபாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாநகரில் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுவரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தடாகம் ரோடு எரிமேடு, முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் தகவல்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த திருஞானம் (25), சாய்பாபா காலனியை சேர்ந்த அபாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.