கோவை வால்பாறையில் கனமழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் உயர்வு..!

சோலையாறு அணை நிரம்ப இன்னும், 12 அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்ந்துள்ளது. இதேபோன்று மழை தொடர்ந்து பெய்தால், மூன்று நாட்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றுடன் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. இடைவிடாது பெய்யும் கனமழையால், பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவு, பகலாக பெய்யும் மழையால், கடுங்குளிர் நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அக்காமலை, கருமலை பகுதியில் பெய்த கனமழையினால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம் நிரம்பியது.

மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 2,726 கன அடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 237 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.

இதனால், சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 148.72 அடி நீர்மட்டம் இருந்தது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,077 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,157 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டது.

சோலையாறு அணை நிரம்ப இன்னும், 12 அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. இதேபோன்று மழை தொடர்ந்து பெய்தால், மூன்று நாட்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):-

வால்பாறை - 57, சோலையாறு - 48, மேல்நீராறு - 81, கீழ்நீராறு - 46, பரம்பிக்குளம் - 27, ஆழியாறு - 9, மேல்ஆழியாறு - 8, காடம்பாறை - 13, பெருவாரிப்பள்ளம் - 32, மணக்கடவு - 12, தூணக்கடவு - 24, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 18, நவமலை - 7, பொள்ளாச்சி - 19 என்ற அளவில் மழை பெய்தது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...