வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வந்து கட்சியை வழிநடத்தி செல்வதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்: அதிமுகவின் ஒற்றை தலைமைக்குமப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராவதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவளிப்பதாக அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்களுக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பெரிய கடைவீதி பகுதியில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில், வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வந்து கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.