கோவையில் அரசு பள்ளிகளை தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளது அரசின்‌ இயலாமையா? - பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கேள்வி..!

பல ஆயிரம்‌ கோடி நிதி, தனி அமைச்சகம்‌, அமைச்சர்‌, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்‌ என்று இருந்தும்‌, குழந்தைகளுக்குத் தரமான கல்வி தர தனியார்‌ நிறுவனங்களை நாடி போகும்‌ சூழ்நிலையில்‌ அரசாங்கம்‌ உள்ளதா..? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: சமீபத்தில்‌ 150 அரசு பள்ளிகளை 40 தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளது அரசின்‌ இயலாமையா? என பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

அனைவருக்கும்‌ தரமான இலவசமான கல்வி கொடுப்பது என்பது அரசாங்கத்தின்‌ கடமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில்‌ என்ன நடக்கிறது?

சமீபத்தில்‌ 150 அரசு பள்ளிகளை 40 தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளதாகச் செய்திகள்‌ வெளியாகின.இந்த ஒப்பந்தத்தின்படி, தனியார்‌ கல்லூரிகள்‌ அரசு பள்ளி மாணவர்களுக்குத் தொழில்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ திறன்‌ பயிற்சி வழங்க இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசின்‌ இயலாமையா?

ஒவ்வொரு வருடமும், பல ஆயிரம்‌ கோடி நிதி, தனி அமைச்சகம்‌, அமைச்சர்‌, ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள்‌ என்று இருந்தும்‌, குழந்தைகளுக்குத் தரமான கல்வி தர தனியார்‌ நிறுவனங்களை நாடி போகும்‌ சூழ்நிலையில்‌ அரசாங்கம்‌ உள்ளதா..? என்பதை முதல்வர்‌ அவர்கள்‌ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்‌.

கடந்த 25 ஆண்டுகளாகத் தனியார்‌ பள்ளிகள்‌ வளர, அரசு பள்ளிகளில்‌ தரம்‌ வேண்டுமென்றே குறைக்கப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின்‌ எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும்‌. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்‌.

எது அரசாங்கத்தின்‌ கடமை? மது விற்பதா? தரமான கல்வி கொடுப்பதா?

அரசியலமைப்பு (எண்பத்தி ஆறாவது திருத்தம்‌) சட்டம்‌ 2002, இந்திய அரசியலமைப்பில்‌ 21-A பிரிவைச்‌ சேர்த்து, 6 முதல்‌ 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும்‌, இலவச கட்டாயக்‌ கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது.

இலவச கட்டாயக்‌ கல்விக்கான குழந்தைகளின்‌ உரிமைச்‌ சட்டம்‌ 2009, அரசியலமைப்பு உறுப்பு 21-Aஇன்‌ கீழ்‌ இது சட்டமாக இயற்றப்பட்டது.

அனைவருக்கும்‌ தரமான இலவசமான கல்வி கொடுப்பது என்பது அரசாங்கத்தின்‌ கடமை என்று இந்த சட்டம்‌ சொல்கிறது.

மதுவை விற்பது அரசாங்கத்தின்‌ கடமை என்று எந்த சட்டமும்‌ சொல்லவில்லை. இதை நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்‌.

கோவை பாமகவின்‌ கோரிக்கைகள்

1.தனியார்‌ நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்‌.

2.அரசு பள்ளிகளின்‌ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்‌.

3.கோவை அரசு பள்ளிகளில்‌ காலியாக உள்ள ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு, ஏற்கனவே தகுதி தேர்வில்‌ வெற்றி பெற்று தங்களின்‌ தகுதியையும்‌ திறமையும்‌ நிரூபித்து இருக்கும்‌ ஆசிரியர்களை உடனடியாக நியமனம்‌ செய்ய வேண்டும்‌.

4.ஆசிரியர்களைத் தற்காலிக அடிப்படையில்‌ நியமிப்பதைத் தடை செய்ய வேண்டும்‌.

நிபுணர்‌ குழு அமைக்க வேண்டும்‌

அனைவருக்குமான முதல்வராக இருப்பேன்‌ என்று முதல்வர்‌ ஸ்டாலின்‌ சொல்லி இருக்கிறார்‌. அதை உறுதி செய்யும்‌ வகையில்‌, பாமகவின்‌ கோரிக்கையை ஏற்று அரசு பள்ளிகளை வளர்ச்சியடைய செய்ய அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய நிபுணர்‌ குழுவை அமைக்க வேண்டும்‌.

சிறந்த நிபுணர்களையும்‌, தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனைகளையும்‌ கொடுக்க பாமக காத்துக்‌ கொண்டிருக்கிறது.

இவ்வாறு கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி இத்திட்டம் குறித்து கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...