கோவை தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் -அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..!

ஒரு சிலர் கோவை, பொள்ளாச்சியில் கூட்டம் நடத்தி விட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் என கூறிய அவர், கோவை கலைஞரின் கோட்டையாக இருந்தது. தற்போது தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில்தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல கட்ட பணிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தை ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக முதலமைச்சருக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற 14-முதல் 16-ம் தேதி வரை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சருக்கு வழியெங்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.



நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக 96-விழுக்காடு என்ற மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம் எனவும் நமது அடுத்த இலக்கு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சராக நமது தலைவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், அவரின் ஆட்சியை இந்தியா முழுவதற்கும் தர வேண்டும் எனவும்,அந்த அளவிற்கு தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஒரு சிலர் கோவை, பொள்ளாச்சியில் கூட்டம் நடத்தி விட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் என கூறிய அவர், கோவை கலைஞரின் கோட்டையாக இருந்தது. தற்போது தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவும் கூறினார். ஒரு பூத்துக்கு 25 பேரை மாற்றுக்கட்சியினரைச் சேர்க்க வேண்டும், அதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் கட்சியில் இணைவதை உறுதி செய்ய வேண்டும் என கூறிய அவர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக முதலமைச்சர் கோவையில் பிரச்சாரத்தை துவங்கினார் எனும் அளவிற்கு வரவேற்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் இதயத்தில் கோவைக்கு தனி இடம் உள்ளது எனவும், தொழில் முனைவோரிடம் நேரடியாக 3 மணி நேரம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார் எனவும் கூறினார்.

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அடித்தளம் அமைக்க வேண்டும். சில பேர் சில கருத்துக்களை சொல்லி வருகின்றனர். முதலமைச்சர் மலை. சிலர் மடு, மலையோடு மோத மடுவினர் நினைக்கிறார்கள் என விமர்சித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் வழியில் முதலமைச்சரை சந்தித்து கைகளை உற்சாக குலுக்கி பேசினார் என கூறினார். இந்தியாவை வழிநடத்தத் தகுதி வாய்ந்த தலைவர் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். நமக்குள் சங்கடம் இல்லாமல் முதலமைச்சருக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...