கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!

சவுரி பாளையம் பிரிவு-உடையாம்பாளையம் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் டாக்டர் இன்பன் வசிக்கும் ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 8-பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்குதொடர்புடைய 49-இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.



அதில், ஒரு பகுதியாக கோவை சவுரிபாளையம் பிரிவு-உடையாம்பாளையம் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் டாக்டர் இன்பன்வசிக்கும் ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடிகுடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



8-பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர் இன்பன் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் கடந்த 9-மாதங்களுக்கு மேலாக இளம் மருத்துவராக பணிபுரிந்து வருவதும்ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...