கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும், கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என்கிளேவ்-ல் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வேண்டி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...