குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும், கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என்கிளேவ்-ல் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வேண்டி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என்கிளேவ்-ல் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வேண்டி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.