டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியதில், ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்டது, மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.
கோவை: கோவை மதுக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் மீது இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு மாடுகளும் உயிரிழந்தது.
கோவை போத்தனூர் - பாலக்காடு ரயில்வே தண்டவாளம், மதுக்கரை மேம்பாலம் அருகே வழக்கமாக மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படும், இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வழக்கம் போல மாலை வீட்டிற்கு திரும்ப அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியது.
இந்த விபத்தில், இரண்டு மாடுகளும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில், மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.
இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் சிக்கியிருந்த மாட்டின் உடலை வெளியே எடுத்தனர். இதனால், ரயில் நீண்ட நேரம் விபத்து பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.