கோவை போத்தனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் ரயில் மோதி உயிரிழப்பு…!

டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியதில், ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்டது, மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.



கோவை: கோவை மதுக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் மீது இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு மாடுகளும் உயிரிழந்தது.

கோவை போத்தனூர் - பாலக்காடு ரயில்வே தண்டவாளம், மதுக்கரை மேம்பாலம் அருகே வழக்கமாக மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படும், இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வழக்கம் போல மாலை வீட்டிற்கு திரும்ப அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு மாடுகளும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில், மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.

இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் சிக்கியிருந்த மாட்டின் உடலை வெளியே எடுத்தனர். இதனால், ரயில் நீண்ட நேரம் விபத்து பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...